மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு
துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியலின் ஆரம்பகால அறிஞர்களுள், 1822 ல், உச்சரிப்பில் consonantal shifts என அறியப்படும் கிரிமின் விதியை உருவாக்கிய, ஜக்கோப் கிரிம் (Jacob Grimm), வேர்னருடைய விதியைக் கண்டுபிடித்த, கார்ள் வேர்னர், "Stammbaumtheorie" யை உருவாக்கிய...
ஆகஸ்ட் ஸ்கிலீச்சர் மற்றும் 1872 ல், "Wellentheorie" ("அலை மாதிரியுரு")வை உருவாக்கிய ஜொஹானஸ் ஸ்கிமிட் என்பவர்கள் அடங்குவர். பெர்டினண்ட் டி சோசர்
Saussure மொழி பற்றிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியிருந்தார். அந்த ஆய்வு பெரிய அளவில் மொழியைக் கடந்து பல குறியீட்டுடுத் துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த மொழி பற்றிய குறியீட்டு விஞ்ஞானம் வெகுசன ஊடகத் தொடர்பாடல் துறை, மானுடவியல், இலக்கியம், தகவல் மேம்பாட்டு போன்ற துறைகளுக்கும் பரவியது. இந்த குறியீட்டு
விஞ்ஞானம் விம்பங்கள், சைகைகள், இசை, ஒலி, பொருட்கள், போன்றவற்றையும்
விளக்கக் கூடிய ஆற்றல் உடையவை. Saussure ஐ பொறுத்தவரை மொழிக்கட்டமைப்பு முக்கியமானது. முறைமை அல்லது கட்டமைப்பு ஏலவே உள்ளது. புதியதல்ல. எல்லா மொழிகளுக்கும் பொதுமையானது. Saussure “நாங்கள் மொழியினை பேசுகின்றோம் என்பதைக் காட்டிலும் நாங்கள் மொழியுடன் பேசுகின்றோம் என்பதுதான் உண்மை”(Language speaks us rather than we speak language) எனக் கூறினார். இதனை மனித மனம் அனுபவத்தின் உதவியின்றி அறிந்து கொள்கின்றது. இந்த அமாழிக்கட்டமைப்பு நாம் எழுதுகின்ற வாக்கியம், வசனம் போன்றவற்றை அர்த்தம் உடையதாக மாற்றுகின்றது. மொழிக்கட்டமைப்பானது வார்த்தைகளை இலக்கண விதிகளுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கின்றது.
மொழி என்ற பெயரால் நம் வாய் எழுப்பும் ஒலிகளுக்கும், அந்த ஒலிகளுக்கான அர்த்தத்துக்கும் சம்பந்தமில்லை. அதாவது, புலி என்ற வாய்மொழிச் சத்தத்துக்கும், புலி என்ற பிராணிக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல் புலி என்ற கருத்துக்கும் புலி என்ற
இந்த அர்த்தங்கள் பொருள்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இந்த வண்ணங்களுக்குப் பதிலாக ஆரஞ்ச், வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களைப் பயன் படுத்தினால் கூட அவையும் இதே அர்த்தங்களைக் கொடுக்கும். எனவே, அர்த்தம் என்பது சார்பு நிலை கொண்டது.
பேச்சு X மௌனம்
குளிர் X வெப்பம்
இருட்டு X வெளிச்சம்
எனவே, சிந்தனை என்பது இரட்டை எதிர் நிலைகளால் ஆனது. இதில் மனிதன் இயற்கை என்ற இரட்டை எதிர் நிலை முக்கியமானது. தனிமனிதன் தன்னைப் பற்றியும், தனது சமூகத்தைப் பற்றியும் சிந்திப்பது போலவே தன்னைச் சுற்றிலும் இருக்கும் இயற்கையைப் பற்றியும் சிந்திக்கிறான். அவன் மனம் இயற்கையை ஆகு
எதற்கும் அர்த்தம் என்று எதுவும் இல்லை. எல்லா அர்த்தங்களும் பொருள்படுத்தப் படுபவையே. அர்த்தம் என்பது அமைப்பு சார்ந்தது. மொழி என்பது ஒரு அமைப்பு.
ஆகவே, மொழி, பிரதிகள், சமூக அமைப்பு போன்ற எல்லாம் சேர்ந்த ஓர் அமைப்பில், அதிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட பகுதிக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து பார்க்கும் போதுதான் அர்த்தம் பிறக்கிறது என்பதை சசூர் கண்டறிந்தார். அந்தக் கோட்பாடு
நிகழ்த்துகிறது என்பதுதான் மொழிசார்ந்த மிகச்சரியான கணிப்புகளை அளிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தின் மொழி குறித்த ஆய்வினை மேற்கொள்வது வரலாற்று விளக்கமுறை மொழியாய்வு எனப்படும். மொழிக்குழுவின் கோட்பாடு மற்றும் பயன்பாடு குறித்த சரியான பார்வைக்கு சூழ்நிலைசார்ந்த மொழி பயன்பாடு பற்றிய பார்வை உதவும். மொழியைக் கோட்பாட்டு ரீதியாக அணுகும் வழியாக மட்டுமே மொழியின் வளர்ச்சியையும், பரிமாணத்தையும் முழுமையாக உணர்ந்தறிய இயலாது. முழுமையான மொழியியல் ஆய்வு என்பது இலக்கணக் கோட்பாட்டு ரீதியாக
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Saturday, 24 December 2011 12:24 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 448












