தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளவியல் ஓர் அறிமுகம்

E-mail

சமூக விஞ்ஞானங்களிலும், உயிரியல் விஞ்ஞானங்களிலும் முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு nஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. உளவியல் என்பதற்கு...

பல்வேறு அறிஞர்கள் இலக்கணம் கூறினாலும் எச்.சீ.வாரன் என்பவர் தனது “உளவியல் அகராதி” என்னும் நூலில் கூறும் நான்கு இலக்கனங்களில் அனைத்தும் அடங்கும். அவையாவன

02. செயல்நிலையறிவகை (Functionalism):- மனநிலைகளின் அமைப்பை அறிந்து கொள்வதை விட அவற்றின் செயல் பயன்களை உணர்வது இன்றியமையாதது என்பதே இதன் அடிப்படையாகும். மனதை ஒரு கருத்தா எனலாம் அது ஒரு நிலையில் நில்லாமல் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கும். நரம்பு, தசை முதலியவற்றின் மூலம் உடலிலும் உயிரிலும் தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும். இது தொடர்பான ஆய்வு முறைகளை இவ் வகை உளவியல் பயன்படுத்தும்.

03. நடத்தை வாதம் (Behaviourism):- மேற்குறிப்பிட்ட வகைகளில் மனநிகழ்ச்சிகளுக்கு முக்கியம் கொடுக்க உடல் மாறுபாடுகளில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நேர்மாறாக உடலிக் செயல்களே முதன்மையாக ஆராய்தற்குரியவை என்ற அடிப்படையில் இவ் வகை செயற்படுகின்றது.

04. முழுநிலைக்காட்சி (Gestalt School):- இக் கொள்கைளைய உருவாக்கியவர்கள் ஐர்மனிய உளவியலாளர்கள். Wertheimer என்பவரது ஆராய்ச்சியின் உடனடியாகக் Kohler, Koffka என்ற இருவரும் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் இக் கொள்கை வளர்ச்சி பெற்றது. செயல்களையோ, அனுபவங்களையோ முறையே மறிவினைச் செயல்களாகவோ, பொறியணர்ச்சிகளாகவோ பிரித்து பார்க்கும் முறை உள்ளத்தின் ஒருமை காணுமியல்பைப் புறக்கணித்தாகும் என்று இதுவரை இருந்து வந்த உளவியல் வகை நிராகரிக்ப்படுகின்றது. எங்கு நோக்கினாலும் முழுகாட்சிப்பொருளே காணப்படுகின்றது. அதனை கற்றல் தொழிலில் நன்கு காணலாம்.

05. நோக்குடைவாதம் (Hormic psychology):- Mc Dougall  என்ற உளவியல் நிபுணர் உயிரியின் செயல்கள் அனைத்தும் தாம் கொண்ட நோக்கங்களை நிறைவேற்ற நிகழ்கின்றன என்ற கொள்கையை நிலை நாட்டினர். மக்களது உடல் சடப்பொருளாதலால் பௌதீக இரசாயன விதிகளால் வாழ்க்கை முழுவதையும் விளக்கமுடியாத என நோக்குமிடத்து உயிரியின வாழ்க்கையில் பௌதீக ரசயான மாறுபாடுகள் இடம் பெற்றாலும் மிகமிக தாழ்ந்த உயிரணுவின் வாழ்க்கையும் எந்திர இயக்கத்தை ஒத்ததாகாது. அதற்கு தன்னியக்கமுண்டு. ஆசை, நோக்கம், ஆர்வம், சக்தி (Horme) இவை உயிரிகளிடத்தில் உண்டு என்கின்றார் Mc Dougall. சமூகவிஞ்ஞானங்களுக்கு உளவியல் அடிப்படை என்று கண்டு Mc Dougall  “சமூகவியலுக்கு முகவுரை” என்ற நூலில் சமூகவியல், பொருளியல், அரசியல், சட்டம் முதலான துறைகளுக்குப் பயன்படக் கூடிய உளவியல் இதுதான் என்று காட்டியுள்ளார்.

எனவே இன்றைய காலகட்டத்தில் உளவியல் துறையானது பல்வேறுபட்ட துறைகளுடன் இணைந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. அந்தவகையில் உடலியல் உளவியல், வளர்ச்சி உளவியல், சோதனை உளவியல், குழந்தை உளவியல், சமூக உளவியல், குற்ற உளவியல், கல்வி உளவியல், ராணுவ உளவியல், விலங்கு உளவியல் என இன்னோரன்ன துறைகளுடன் தொடர்பு பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றது.

 

 

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Sunday, 30 January 2011 08:24 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 250
Last Updated on Saturday, 24 December 2011 13:13  
கட்டுரையினை எழுதியவர்: KFasmin

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.