.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புவிக்கோளத்தின் வாழ்வும் இறப்பும்...

E-mail

அதனுடைய 4.5 பில்லியன் வருட காலங்களில் எமது பூமி படிப்படியாக தனது வெப்பத்தை இழந்து வந்துவிட்டது. மிகுந்த வெப்பம் கொண்ட கிரகமாக பிறந்து இன்று சமுத்தரங்களால் சூழப்பட்டு மனிதனால் அறியப்பட்ட வரைக்கும் அண்டவெளியில் ஒரே ஒரு நீல நிற கோளமாக சஞ்சரிக்கின்றது பூமி. ஆனால் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தப்படி பூமி அதன் ...

அழிவுப்பாதையில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. எனப்படுகிறது. அவர்களுடைய கருத்துப்படி 4.5 பில்லியன் வருடம் என்பது பூமி தனது சூரியனின் கடிகாரத்தில் மு.ப 4.30 சென்றடைந்துவிட்டதற்கு சமம் எனப்படகின்றது இதன்படி மு.ப 5.00 மணிக்கு உலகினை 1 பில்லியன் வருடம் ஆட்சிசெய்து வந்த விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என்பன முடிவுக்கு வரும். தொடர்ந்து காலை 8.00 மணிக்கு சமுத்திரங்கள் ஆவியாகத்தொடங்கும் எனப்படகிறது. மதியம் அதாவது 12 பில்லியன் வருடங்களுக்கு பின் எமது சூரியன் தனது ஒளியினை இழந்து பாரிய சிவந்த ஒளிப்பிண்டம் போல் காட்சியளிக்கும். கோள்கள் சூரியனால் கவரப்பட்டு மறைக்கப்படும் இந்தவேளையில் பூமியும் இந்த அண்டவெளியில் உருக்குலைந்து மறைந்து போகும்.

 


என்கின்றனர் அவாகள். அந்தவகையில் எமது கோளினுடைய மறைவு இன்னும் 7.5 பில்லியன் வருடங்களுக்கு அப்பால் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் மக்கள் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறும் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் அறிஞர் Donald Brownlee “நாம் இருக்கின்ற இப் பூமி எங்களுக்கு கிடைத்த அரிய செல்வம் நாம் இப் பூமியில் வாழ்கின்ற இக்காலம் மிகவும் அரியது ஆகையால் இப் பூமியை பாதுகாப்பதில் நாம் ஆர்வம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்” என்கிறார். இவருடைய நூலாகிய “பூவிக் கோளத்தின் வாழ்வும் இறப்பும்” (The Life and Death of Planet Earth) என்ற நூல் பூமியின் இரண்டாவது அரைப்பகுதியில் உயிரின வாழ்க்கையின் சாத்தியக் கூறுகள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. Ward and Brownlee's என்பவர்களின் “அரிதான பூமி” (Rare Earth) என்ற நூல் பெருமளவில் பேசப்பட ஒரு நூல் என்பதுடன் அதிகளவில் விற்பனையாகிய நூலும் அகும்.


அண்டவெளியின் பல்லாயிரக்கணக்கான கோளங்களில் புவியின்
தனித்துவத்தினையும், சிறப்பத்தன்மையினையும் ஆராய்கின்றது இந்நூல். “பூவிக் கோளத்தின் வாழ்வும் இறப்பும்” (The Life and Death of Planet Earth) என்ற நூலில் ஆசிரியர் புவியில் உயிரினங்களின் இறுதிக்காலங்களை விபரிக்கும்போது அது உயிரினங்களின் ஆரம்ப காலங்களை ஒத்ததாக இருக்கும் என்கிறார். புவியெங்கும் இருள் படரத்தொடங்கும்போது நிலப்பரப்பை காட்டிலும் சமுத்திரங்கள் சூடானதாக மாறும் அப்போது அழிந்த உயிரினங்கள் போக எஞ்சிய ஒருகல அங்கிகள், பற்றீறியாக்கள் கடலில் வாழ்விடத்தினை அமைத்துக்கொள்ளும். இறுதியில் இவ்வுயிரினங்களும் அழிந்துவிடும் என்கிறார் இந்நூலாசிரியர்.


இதற்குள் மனித இனம் வேற்று கிரகம் ஒன்றினை கண்டறிவதற்கான அவல் அதிகரித்து வந்தாலும். அக்கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும் அவை புவியில் உள்ள மனித இனத்தின் டீ.என்.ஏ தன்மைகளுடன் பொருத்தமற்றவையாகவே இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். ஆகவே இது ஓர் பாரிய சவாலாக மனித இனத்திற்கு இருக்கும் எனப்படுகிறது. இதற்கிடையில் வானியல் ஆய்வாளர்கள் எமது அண்டவெளி(Universe) மிகவும் பழையது என்ற கருத்துக்களையும் வெளியிட்டள்ளனர்.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 394
  • திருத்தியமைக்கப்பட்டது: 4 தடவைகள்
  • இணைக்கப்பட்டது: Wednesday, 18 March 2009 04:44 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 64
Last Updated on Wednesday, 28 July 2010 12:08  

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116094

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

is it true...?

2012 நடக்கப்போவது...
 

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 6 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday175
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3329
mod_vvisit_counterThis month17980
mod_vvisit_counterAll150284

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.