புவியின் மேற்பரப்பு நிலங்களின் பல்வேறு
தன்மைகள் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் இன்று புவியில் காணப்படுகின்ற நிலவுருவங்கள் யாவும் இருவேறுபட்ட விசைகளின் தொளிற்பாடு காரணமாகவே தோன்றியுள்ளன என வகைப்படுத்தி நோக்குகின்றனர். அந்தவகையில் புவியின் புறவிசை,அகவிசைக்காரணிகள் தொடர்பான அவர்களின் கருத்துக்கள் இன்று மேலோங்கியுள்ளன. எனினும் நாம் அகவிசைக் காரணியானது எவ்வாறு புவியின் வேறுபட்ட நிலவுருவங்களின் உருவாக்கத்தில் துணை போகின்றது என்பதனை சற்ற விரிவாக நோக்கவுள்ளோம். ஏறக்குறைய...
புவிதோன்றியதாகக் கருதப்படும் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே புவியில் பல்வேறுபட்ட நிலவாக்கச்செயன்முறைகள் அகவிசைமூலம் நடந்தேறிவருகின்றன.
பாகு நிலையான புவியின் உட்கோளம் தொடர்பான கருத்துக்களின் வளர்ச்சியுடன் புவியோட்டு நகர்வுகளின் வேறுபட்ட செயற்பாடுகள் தொடர்பாக கொடுக்கப்படுகின்ற விளக்கங்கள் அவற்றினால் உண்டுபண்ணப்படுகின்ற மேற்பரப்பு நிலத்தோற்றங்கள் சார்பாக அதிகமான விளக்கங்களை தருகின்றன.
பெரும்பாலும் புவியின் அகவிசைக் காரணிகள் என நாம் அனைவரும் கருத்தில் கொள்ளுகின்ற விடையமான புவியோட்டின் கீழ்
அடுக்குகளில் தொளிற்படும் கிளர் மின்காந்தவிசைகளின் தாக்கங்களை அடியொட்டியே இன்று புவியோடுகளின் நகர்வுகளுக்கான விளக்கங்களும் முன்வைக்கப்படுகின்றன. “ஏறக்குறைய நூறு கிலோமீற்றர்கள் தடிப்புடைய புவியோட்டின், கீழ் இடையோட்டின் மேற்பகுதியை ஒட்டித் தொளிற்படும் ஒரு கிளர் மின்காந்த விசையானது சியல்,சீமா படைகளின் இருக்கையான புவியோட்டினை உந்தி நகர்த்துகின்றன” என்ற கருத்து இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
புவியின் அகவிசைக்காரணிகள் எவ்வாறு நிலவுருவங்களை ஆக்குகின்றன என்ற இப்பகுதியில் இருவேறு பிரிவுகள் ஊடாக நாம் இத்தலைப்பினை ஆராய உள்ளோம். பெரும்பாலான நிலவுருவங்கள் புவியோட்டின் நகர்ச்சியுடன் ஒன்றியவையே எனினும் அனைத்தையும் ஓரே தலைப்பின் கீழ் கொடுப்பதிலும் சற்று விரிவாக நோக்குவதில் உள்ள எளிமை கருதி அத்தலைப்புக்களை இரண்டு பெரும் தலைப்புக்களாக பிரித்து இங்கு நோக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 2174
- இணைக்கப்பட்டது: Thursday, 22 January 2009 21:55 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 75


















